பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
481
|
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. |
482
|
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின். |
483
|
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். |
484
|
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். |
485
|
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. |
486
|
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
487
|
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. |
488
|
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். |
489
|
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. |
490
|
1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ள வாழ்வியல் நூல்.
காலமறிதல்
Labels:
அரசியல்,
பொருட்பால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment