கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
நிற்க அதற்குத் தக.
391
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
புண்ணுடையர் கல்லா தவர்.
393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
அனைத்தே புலவர் தொழில்.
394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
கடையரே கல்லா தவர்.
395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
கற்றனைத் தூறும் அறிவு.
396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
சாந்துணையுங் கல்லாத வாறு.
397
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
எழுமையும் ஏமாப் புடைத்து.
398
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
காமுறுவர் கற்றறிந் தார்.
399
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
மாடல்ல மற்றை யவை.
400
good excellent work
ReplyDelete