புலவி


புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
1301
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
1302
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
1303
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
1304
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
1305
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
1306
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.
1307
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
1308
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
1309
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
1310

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...