நலம்புனைந்துரைத்தல்


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
1111
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
1113
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
1114
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
1115
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
1116
அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
1117
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.
1118
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
1119
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
1120

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...