வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
துணைவலியும் தூக்கிச் செயல்.
471
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
செல்வார்க்குச் செல்லாதது இல்.
472
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
இடைக்கண் முரிந்தார் பலர்.
473
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
வியந்தான் விரைந்து கெடும்.
474
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
சால மிகுத்துப் பெயின்.
475
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
476
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
போற்றி வழங்கு நெறி.
477
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
போகாறு அகலாக் கடை.
478
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
இல்லாகித் தோன்றாக் கெடும்.
479
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
வளவரை வல்லைக் கெடும்.
480
No comments:
Post a Comment