பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். |
191
|
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. |
192
|
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. |
193
|
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. |
194
|
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். |
195
|
பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். |
196
|
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. |
197
|
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். |
198
|
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். |
199
|
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். |
200
|
1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ள வாழ்வியல் நூல்.
பயனில சொல்லாமை
Labels:
அறத்துப்பால்,
இல்லறவியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment