ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
தேர்ந்துசெய் வஃதே முறை.
541
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
கோல் நோக்கி வாழுங் குடி.
542
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
நின்றது மன்னவன் கோல்.
543
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
அடிதழீஇ நிற்கும் உலகு.
544
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
பெயலும் விளையுளும் தொக்கு.
545
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
கோலதூஉங் கோடா தெனின்.
546
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
முறைகாக்கும் முட்டாச் செயின்.
547
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
தண்பதத்தான் தானே கெடும்.
548
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
வடுவன்று வேந்தன் தொழில்.
549
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
களைகட் டதனொடு நேர்.
550
No comments:
Post a Comment