நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். |
511
|
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. |
512
|
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. |
513
|
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். |
514
|
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. |
515
|
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். |
516
|
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். |
517
|
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். |
518
|
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. |
519
|
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. |
520
|
1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ள வாழ்வியல் நூல்.
தெரிந்துவினையாடல்
Labels:
அரசியல்,
பொருட்பால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment